உடுமலை, ஆக. 30- உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை யின் இலக்கிய மன்றம் சார்பில் கல்விக்கருத்தரங்கு வியாழனன்று கல்லூரியில் திறந்தவெளி கலை யரங்கில் நடைபெற்றது. இ்க்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர்(பொ)பேரா.ச.பொன் முடி தலைமை வகித்தார். மாணவி இரா.மோகனசுந்தரி வரவேற் றார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் வ.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்திப் பேசினார். கல்வியாளரும், பொதுப்பள்ளி களுக்கான மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு சிறப்புரை யாற்றினார். அவர்தம் உரையில், ஆதிகால மனிதன் கல்லெறிதலும், நெருப்பின் ஆற்றலை உணர்ந்த தும் தான் அவன் கற்றுக் கொண்ட முதல் கற்றல் நிகழ்வு. முதலில் ஒரு வர் கற்றால் அவரிடமிருந்து, மற்ற வருக்குப் பயன்பட்டு, ஒட்டு மொத்த சமூகமும் பயனடையும். அதுதான் கல்வி. கற்றல் நிகழ்வு நின்றவுடன், கற்பிதம் தொடங்கு கிறது. கற்பிதம் தொடங்கியதும் கற்றல் நின்று விடுகிறது. சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டும் இலக்கியங்கள் அவசி யம் தேவை. சிக்கல் உருவாகும் இடத்தில் அதற்கான தீர்வும் இருக்கும். அதனால் தான் கௌதம புத்தர், மக்களிடம் செல்லுங்கள்; மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்; என்றார். ஆசிரியர், அரசு ஊழியர் என்ற நிலையைக் கடந்து, ஒரு சமூகச்செயற்பாட்டாளர், ஆசிரி யர் ஓர் அரசியல் செயல்பாட்டாளர் ஆக இருப்பதால் தான், கற்றல் தொடர்ந்து நடைபெறுகிறது. முதலில் பொதுப்பள்ளிக்கான குரல் கொடுத்த மகாத்மா ஜோதி ராவ் பூலே மற்றும் சமூகப் பொரு ளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர் களும், பெண்களும் கல்வி கற்க பல அவமானங்களைத் தாங்கியவரு மான சாவித்திரிபாய் பூலே ஆகி யோர் போராடியதால் இன்று அனைவருக்கும் கல்வி கிடைத்தி ருக்கின்றது. இதன் நீட்சியாக தந்தை பெரியார், காமராசர் போன் றோரின் பணிகள் அமைந்தன. வாய்ப்பு மறுக்கப்பட்ட மாண வர்களின் பிரதிநிதிகளாக இன் றைய மாணவர்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். சமூகக் கல்வி குறித்த செய்திகளை மற்றவர்களி டம் கொண்டு செல்லுங்கள்” இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், பேராசிரியர் முனைவர் ப.அபுபக்கர், முனைவர் சி.அயோத்தி, முனைவர் ந.வேலு மணி, முனைவர் அ.கன்னிமுத்து உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியர் களும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் முது கலை தமிழ் இலக்கியம் இரண் டாம் ஆண்டு மாணவி சு.எஸ்தர் கிரேசி நன்றி கூறினார்.