tamilnadu

img

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாணவர்களின்  கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் ரத்த தானம் 

பொள்ளாச்சி, ஏப்.29- பொள்ளாச்சி அரசு  மருத்துவமனைக்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் ரத்ததானம் வழங்கப்பட்டது. 

நாடுமுழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த இருப்பு பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் ரத்ததானம் கோரி, தன்னார்வலர்களிடம் அழைப்பு விடுத்திருந்தது.  இதனையடுத்து   பொள்ளாச்சி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் புதனன்று 20 யூனிட்  ரத்த தானம் வழங்கப்பட்டது.  முன்னதாக ,  இந்நிகழ்விற்கு  சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீட்டு செயலாளர் இரா,மனோகரன் துவக்கி வைத்தார். இதில் திமுக நகர செயலாளர் பழ,அசோக் ,பொறுப்பாளர் பிரகாஷ், ராஜேஷ், கருப்பசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;