அவிநாசி, மார்ச் 11- அவிநாசி அருகே சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள் ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சேவூர் அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று பரா வாமல் தடுக்க சேவூர் அரசு மருத் துவமனை மருத்துவர்கள் புத னன்று விழிப்புணர்வுகளை ஏற் படுத்தினர். கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருப்ப தற்கு தேவையான முன்னெச்ச ரிக்கை மற்றும் நோய் தடுப்பு நட வடிக்கைகளை சுகாதார துறை யினர் மேற்கொண்டு வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக, இந்த நோயின் அறிகுறி பரவும் விதமும், பாதிப்பு வராமல் இருக்க செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் குறித்து சேவூர் அரசு மருத்துவர் கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சேவூர் சுற்றுப் பகுதியில் உள்ள பல பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வுகளை ஏற் படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாண வியர்களிடம் மருத்துவர்கள் கூறு கையில், கோவிட்-19 என பெயரி டப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவின் ஊபேப் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக் கப்பட்டது. இத்தொற்றின் அறி குறிகள் தோன்றுதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். காய்ச் சல், இருமல், தொண்டை கரகரப்பு, சளி, உடல்சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சுதிணரல் ஏற்படும். இது தான் இந்த நோயின் அறிகுறியாகும். இந்த நோய் தும்பும் போது வாயி லிருந்து வெளிப்படும் எச்சில் மூல மாக அருகில் உள்ள நபருக்கு நேரடியாக பரவுகிறது. இந்த நோய் தொற்று காற்றில் இருப்ப தில்லை. ஆனால், மனிதன் பயன் படுகின்ற எல்லா பொருள்களிலும் தங்கும். மனிதனின் கைகளில் இருக்க வாய்ப்புள்ளது.
அதனால், ஒரு நாளைக்கு 10 முறையாவது கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவுதல் வேண்டும். இருமல், தும்மல் உள்ள மாண வர்கள் கைக்குட்டையை பயன் படுத்த வேண்டும். உடல் நலக் குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட் டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சல், இருமல் நோய் அறிகுறி உள்ள நபர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண் டும். மேலும், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதையும் வெளியூர் பயணங் களையும் தவிர்க்க வேண்டும் என கூறினர். இதேபோல், சேவூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயா ளிகளிடமும், கர்ப்பிணி பெண் களிடமும் இந்த நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மருத்துவர்கள் யசோதா, சரண்யா, சண்முகப்ரியா, விக்னேஷ், சுகா தார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்ட னர்.