tamilnadu

img

சிலம்பாட்ட போட்டியில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை

அவிநாசி, அக். 23- திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி யில்  அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் சிறப்பிடம் பிடித்தனர். டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன் னிட்டு அவிநாசியில், டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட சிலம் பாட்ட கழகம் மற்றும் ராயம்பாளையம், சிங்கை கோதா முத்து வாத்தியார், ஆசிரியர் அவினாசியப்பர் நினைவு உடற் பயிற்சி நிலையம் சார்பில் தமிழக பாரம்பரிய கலைகளை வளர்க்கும் முயற்சியாக பள்ளி குழந்தைகளுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் அவிநாசி  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடை பெற்றது. எடை மற்றும்  தொடுதல் முறை போன்ற பிரிவுக ளில் நடந்த இந்த சிலம்பாட்ட போட்டியில் திருப்பூர் மாவட் டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 23 மாணவிகள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 68 புள்ளிகளை பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்த னர். இதைத்தொடர்ந்து சாதனை படைத்த மாணவிகளுக் கும், சிலம்பாட்ட பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு ) திலகவதி தலைமை தாங்கினார். டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை செயலாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.  இதில் சிலம்பப் பயிற்சியளித்த தலைமை பயிற்சியாளர் ராமன், துணை பயிற்சியாளர்கள் தேவ அரசு,  ஈஸ்வரன் மற்றும் மாணவிகளை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியை மணி நன்றி கூறினார்.