tamilnadu

அவிநாசி ,தாராபுரம் ,நாமக்கல் முக்கிய செய்திகள்

தீ விபத்து

அவிநாசி, செப். 20- அவிநாசியில் உள்ள மயூரா பேக்கரி மேல் தளத் தில் வெள்ளியன்று தீ விபத்து ஏற்பட்டது. அவிநாசியிலிருந்து சேவூர் செல்லும் சாலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக மயூரா பேக் கரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளி யன்று மயூரா பேக்கரி மேல் தளத்தில் இருந்த ஜெனரேட்டரில்  திடீரென்று தீப்பிடித்து எரிந்துள் ளது. இதைக்கண்ட பேக்கரி உரிமையாளர்கள் பொது மக்கள் ஆகியோர் சேர்ந்து தீயை அணைத்தனர்.

நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம் போக்குவரத்தில் மாற்றமா?

தாராபுரம், செப். 20 - தாராபுரத்தில் நான்குவழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வரையிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் 60 சதவிகிதம் முடிவ டைந்துள்ளது. தாராபுரம் அமராவதி திருப்பத்திலிருந்து கொட்டாப்புளிபாளையம் சாலை வரை மேம்பாலமும், உப்பாறு பாலம், புறவழிச்சாலை அமராவதி பாலம் அருகே புதிய பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.  தாராபுரம் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தால்தான் பணிகள் செய்ய இயலும். இதற்கென போக்குவரத்துதுறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்துறையினர், காவல்துறையினர் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்காலிகமாக பேருந்து நிலையம் குறித்து பொள்ளாச்சி சாலை பவர் ஹவுஸ், ஐடிஐ திருப்பம், அலங்கியம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து, அந்தந்த மார்க்கத்தில் செல்லும் பேருந்துகளை அந்த பகுதிகளிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தாராபுரம் சார் ஆட்சியர் இறுதி முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.

கொத்தடிமைகளாக இருந்த மூவர் மீட்பு

நாமக்கல், செப்.20- நாமக்கல் அருகே கோழிப்பண்ணையில் கொத் தடிமையாக இருந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர். கருர் மாவட்டம்,  ஜெகதாபி பகுதியைச் சேர்ந்தவர்  தங்கராஜூ (38).  இவரது மனைவி மகேஸ்வரி (34).  இவர்க ளுக்கு 15 வயதுடைய ஒரு மகள் உள்ளார்.  கடந்த 2011-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் செட்டித்தோட்டம் என்ற பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கராஜுவும், மகேஸ்வரியும் பணிக்குச் சேர்ந்தனர். அங்கு, அவர் களுக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்ட தாக கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து அதிகாலை 4  மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக வேலை வாங்கி வந்ததாகவும்,  ரூ.50 ஆயிரம் வாங்கியதற்காக, எட்டு ஆண்டுகளாக எவ்வித ஊதியமின்றி அவர்கள் கொத்தடிமை முறையில் பணியாற்றி வந்துள்ளனர்.   இதுகுறித்த தகவல் தனியார் தொண்டு நிறுவ னத்துக்குத் தெரியவந்த நிலையில், நாமக்கல் சார்- ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதியிடம் புகார் அளித் தனர்.  இதனையடுத்து  வியாழனன்று சார்- ஆட்சியர்  மற்றும் மோகனூர் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா,  தொழிலாளர் துறை ஆய்வாளர் விஜய்,  தொண்டு நிறு வனத்தைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர் மூன்று பேரையும் மீட்டு,  நாமக்கல் சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.  இதன்பின் கோழிப் பண்ணை உரிமையாளரை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட மூன்று பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.