அவிநாசி பகுதியில் குடிநீரின்றி மக்கள் அவதி
அவிநாசி, ஜூலை 21- அவிநாசி அடுத்த கருவலூரில் நான்கு நாட்க ளாக குடிநீர் வராததால் விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரு கின்ற ஆற்று நீரே விநியோகிக்கப்படுகிறது. இந் நிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆற்று நீர் வராததால், மக்கள் குடி தண்ணீர் கேன் ரூ.50 கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கருவலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்குகிராம மக்களும் பொது குழாய் மூலம் குடி தண்ணீர்பிடித்து செல்கிறோம். முன்னறிவிப்பின்றி திடீரென குடிநீர் விநியோகத்தை நிறுத்தம் செய்துள் ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றோம். எனவே உடனடியாக குடிதண்ணீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனமாவட்ட நிர்வா கத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஞ்சல் அலுவலகத்தில் பார்சல் மையம் திறப்பு
தருமபுரி, ஜூலை 21- தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பார்சல் மைய திறப்பு விழா நடைபெற்றது. தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடை பெற்ற விழாவில், அஞ்சல் துறை முதன்மை தலைவர் சம்பத் தலைமை வகித்து, பொருள்களை (பார்சல்) அனுப்பும் மையத்தை திறந்து வைத்து பேசினார். மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் ஷியூலி பர்மன் முன் னிலை வகித்து பேசுகையில், அஞ்சல் துறை சார்பில் விரைவு சேவை வழங்கவும், பார்சல் சேவையை மேம்படுத்தவும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இனி அனைத்து பார்சல்களும் இந்த மையத்தின் மூலமே கையாளப்படும். குறைந்த செலவில் அஞ்சல் துறை வழங்கும் இந்த துரித சேவையை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தருமபுரியில் 19 துணை அஞ்சலகங்களின் மூலம் பதிவு செய்யப்படும் பார்சல்கள் அனைத்தும் இம்மையத்தின் சார்பில் விரைவாக சென்று சேர்க்கப்படும் என தெரிவித்தார். இவ்விழாவில், அஞ்சல் துறை இயக்குநர் வி.ராமசாமி, தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி, கோவை கண்காணிப்பாளர் கே.பாலசுப்ரமணியன் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்
சேலம், ஜூலை 21 சேலத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்க ளுக்கான குறைதீர் கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி நடை பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கா கவும்,படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காக வும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கவுள்ள முன்னாள் படை வீரர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக தங்களது விண்ணப் பத்தை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.