tamilnadu

img

காட்டுயானை தாக்கி இரண்டு நாளில் இரண்டு பேர் பலி

கோவை
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் காட்டு யானை தாக்கியதில் பிரேம்தாஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கணபதி கார்டன் என்ற இடத்தில் நேற்று இரவு நேரத்தில் வெட்ட வெளி பகுதியில் பிரேம் தாஸ் என்பவர் தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் மது  அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை இருவரையும் விரட்டியது. அப்போது யானை தாக்கியதில்  சம்பவ இடத்திலேயே பிரேம்தாஸ் என்பவர்  உயிரிழந்தார். காட்டுயானையிடம் இருந்து தப்பிய விக்னேஷ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர் பிரேம்தாஸ் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று பன்னிமடை பகுதியில் கணேசன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில் அதே  யானை இன்றும் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 

;