உதகையை அடுத்த அரவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக போனஸ் தொகை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து வெள்ளியன்று ஒப்பந்த தொழிலாளர்கள் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜே.ஆல்தொரை தலைமையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.