tamilnadu

img

அவிநாசியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

அவிநாசி, ஜன. 24- அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலகத்தில் வியாழனன்று ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பதிவியேற்று பயிற்சி முடித்துள்ளனர். இந்நிலையில், அவிநாசி ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி யிட்டனர். இதில் புதுப்பாளையம் ஊராட்சியில் தேவிகா, குமரவேல், பாலசுப்பிரமணியம், கானூர் ஊராட்சியில் சக்திவேல், ஜீவா, போத்தம்பாளையம் வேலுச்சாமி, புஞ்சை தாமரைக்குளம், குமாரசாமி, வடுகபாளையம், ராமசாமி, அய்யம்மாள், நடு வச்சேரி ரங்கசாமி, வேலாயுதம்பாளையம் பேபி, ராயன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளனர்.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இதில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ் பாராட்டு தெரிவித்து, கதராடை அணி வித்தார்.

;