tamilnadu

img

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு கிராம மக்கள் மனு

அவிநாசி, மார்ச் 3- அவிநாசி அருகே மதுபான கடைக்கு  எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், உப்பிலிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகு தியில் மதுபான கடை  அமைக்கத் திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அமைதியான கிராமப்பகுதியில் மதுபான கடை அமைந்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாவர் என்று ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் கணபதிசாமி ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.