tamilnadu

img

குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைத்திடுக சிபிஎம், வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்

அன்னூர், ஜூலை 24- அன்னூர் பேரூராட்சி பகுதியிலுள்ள அவிநாசி சாலையினை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தி னர் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் பேரூ ராட்சிக்குட்பட்ட அவிநாசி சாலையில் புதி தாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகி றது. இப்பணிக்காக சாலையில் பெரிய ளவிற்கு குழிகள் தோண்டப்படுகிறது.

ஆனால், குழாய் பதித்த பிறகு தோண்டப் பட்ட குழிகளை முறையாக மூடாமலும், சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இந்நிலையில், இதனை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலா ளர் முகமது முசிர்,  வாலிபர் சங்கத்தின் முன் னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

;