தருமபுரி, ஜூலை 2- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட் டத்தில் வேலைகேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார் பில் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனுகொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாகவும், நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.400 வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குப் பதிவு நாளன்று நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சட் டக்கூலி ரூ.229 வழங்குவதாக அரசு அறிவித் தபடி வழங்கவேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. மேலும், நிறுத்தி வைக்கப்பட்ட முதி யோர் உதவித்தொகை வழங்கவேண்டும். இலவச மனைபட்டா வழங்க வேண்டும். மொரப்பூர் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுககும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கர்ணல் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் சி.பழனி, ஜோதி ஆகியோர் கோரிக்கையை விளக் கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.தங்க ராஜ், வாலிபர் சங்க மாவட்ட துணை தலை வர் சி.வேலாயுதம் மாதர் சங்க தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போராட்டத்தின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.