tamilnadu

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிப்பு

ஈரோடு, மே 8-அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசுஉதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் றறற.ளமடைடவசயiniபே.வn.படிஎ.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும்விளக்க கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுப்புகளை கவனமாக படித்து புரிந்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் ஒவ்வொரு மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சிகள் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு நடைபெறும்என்ற விவரம் இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. அந்தநிகழ்ச்சிநிரலின்படி மாணவர்கள் ளுiபேடந றiனேடிற முறையில் தாங்கள் சேரவிரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

;