tamilnadu

img

கடவுளின் பெயரில் ரவுடியிசம் செய்தோர் மீது நடவடிக்கை

திருப்பூர், ஆக. 20- திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கடவுளின் பெய ரில் ரவுடியிசம் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் நபர்கள் மீது கால தாமதம் செய்யாமல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க முதலி பாளையம் ஊராட்சி அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. முதலிபாளையம் ஊராட்சி அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ் வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வரும், திமுக அவைத் தலைவரு மான பி.விஸ்வலிங்கசாமி தலைமையில் நடைபெற்றது.  இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்ட், அமமுக, மதிமுக, விசிக,  தமாகா ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ பகுதியில் ஞாயிறன்று மதியம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர் வணிக நிறுவனங்களிடம் கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்துவதற்காக மிரட்டி கட்டாய வசூல் செய்துள் ளனர். இதில் ஜனனி எலக்டிரிக் கல் ஹார்ட்வேர்ஸ் கடை உரிமை யாளர் அன்னபூர்ணா மற்றும் ஊழியர் சிவா ஆகியோரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட் டுள்ளனர். இது தொடர்பாக ஆதா ரப்பூர்வமான செய்திகள் வெளி வந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு பல அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள், வர்த்தக நிறுவ னங்கள் மற்றும் பொது மக்களை மிரட்டி கட்டாய வசூலில் ஈடுபடு வதை வன்மையாகக் கண்டிப்ப துடன், கட்டாய வசூல் செய்வதற் காக வியாபாரியை அடித்துத் துன்புறுத்தி ரவுடியிசம் செய்த  வி.எச்.பி. நபர்கள் மீது காலதா மதம் இல்லாமல் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் இதே நிலை தொடரு மானால் அடுத்த நடவடிக்கையாக பொது மக்களைத் திரட்டி கடை யடைப்பு மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது என கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.