tamilnadu

நூறுநாள் வேலைதிட்டத்தில் முறைகேடு விவசாய தொழிலாளர் சங்கம் தொடர் முழக்கப் போராட்டம்

தருமபுரி, மார்ச் 10- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தில் தினக்கூலி ரூ. 600 வழங்ககோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. கிராமப்புற விவசாய வேலை  குறைந்து போனதால் மகாத்மா காந்தி நூறுநாள் வேலைத் திட் டத்தில் ஓரளவு வேலையும், கூலியும்  கொடுத்து வந்தது. இத்திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வா தாரத்தை பாதுகாத்து வந்தநிலை யில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  பாஜக அரசு படிப்படியாக இத்திட் டத்துக்கு நிதி குறைத்தது. தொடர்  போராட்டத்தின் விளைவாக இத் திட்டம் செயல்படுத்தி வருகிறது. ஏரி, குளம், கால்வாய்களை தூர் வாரி நீர்பாசனத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்ட இத் திட்டத்தை மாநில அரசு அதன்  பங்கிற்கான கட்டுமான வேலை களை  தீர்மானித்து கூலியாக கொடுக்க வேண்டிய பணத்தை வழங்காமல் இத்திட்டத்தை முடக்கி யுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகளை புகுத்தி ஆளும் கட்சியை சார்ந்தவர்களும், காண்ட்டிரக்ட்காரர்களும் கொள் ளையடிக்கும் இத்திட்டமாக அதிமுக அரசு மாற்றி வருகிறது. இதன்காரணமாக ரூ.4,127 கோடிக்கு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக தணிக்கை விபரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தும்  மத்திய, மாநில அரசுகள் எந்தநட வடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இத்திட்டம் சமூகத்திற்கு பலன்அளிக்கவில்லை என காரணம்  காட்டி மத்திய, மாநில அரசுகள் முடக்க முயற்சி செயகிறார்கள்.

வறட்சியின் காரணமாக வெளி யூர் செல்பவர்களை தடுக்கவும், சொந்த கிராமத்தில் கந்து வட்டி காரர்களிடமிருந்து பாதுகாக் கவும், ஏழை, எளிய மக்கள் சுய மரியாதையாக வாழ நூறுநாள் வேலையை 250 நாட்கள் வேலை யாகவும், தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும்.தருமபுரி மாவட் டத்தில் சமூக தணிக்கையில் கண்டு பிடிக்கப்பட்ட பண மோசடி செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். வேலை செய்யும் இடங் களில் குடிநீர், நிழற்கூடம், மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டும்  என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.முத்து தலைமை வகித்தார். இதில், மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.எல்லப்பன், ரஜினி(எ)முருகன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சி.ராஜா, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம். மாரிமுத்து, விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுணன்,அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.கிரைஸாமேரி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். நிறை வாக கே.கோவிந்தசாமி நன்றி கூறி னார்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.சின்ராஜ் தலைமை  வகித்தார். இதில், சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பூங் கோதை, மாவட்ட செயலாளர் ஜி. கணபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பி. செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் பி.சாமியப்பன் உள்ளிட்ட எண்ணற்ற விவசாயி கள் பங்கேற்றனர். இதனையடுத்து  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.