tamilnadu

img

பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடு ஜாக்டோ- ஜியோ அமைப்பு கண்டன முழக்கம்

கோவை, செப்.17- அரசு ஊழியர் சங்க முன்னணி தலைவர்களை பழிவாங்கும் நட வடிக்கைகைளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியு றுத்தி கோவையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடு பட்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும், ஜாக்டோ- ஜியோ போராட்டக்குழுவின் ஒருங்கினைப்பாளராகவும் செயல்பட்டு வருபவர் வெ. செந்தில் குமார். இந்நிலையில், தமிழக அரசு பழிவாங்கும் நட வடிக்கையின் ஒருபகுதியாக செந்தில்குமார் திருவண்ணா மலை மாவட்டத்திற்கு இடமாறு தல் செய்யப்பட்டுள்ளார். இதே போல் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ் மற்றும் நிர் வாகிகள் ஸ்ரீனிவாசன், ராம மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் இடமாறுதல் செய்யப்பட்டுள் ளனர். தமிழக அரசின் இந் நடவடிக்கைகள் அரசு ஊழியர் கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இடமாறுதலை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். மீண் டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். பழிவாங்கும் நட வடிக்கையை கைவிட்டு அரசு ஊழியர்களின் கோரிக்கையை பேச்சுவார்த்தையின் மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப் பினர். இந்த போராட்டத்திற்கு  அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் சு.குமார் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட  தலைவர் முத்துராஜ், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசு, ராஜ சேகர் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்று  தமிழக அரசின் நடவடிக்கை களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஈரோடு
இதேபோல், ஈரோடு மாவட் டம், கொடுமுடி ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கொடுமுடி வட்டார தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜே. பாஸ்கர்பாபு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.