tamilnadu

img

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

ஈரோடு, அக்.30- பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஈரோட்டில் துவங்கியது. ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் புதனன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி களை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் புதனன்று தொடங்கி  வைத்தார். இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களைச் சார்ந்த 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட 384 மாண வர்களும், 384 மாணவியர்களும் சதுரங்க விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதன் துவக்க நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.