திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் மூன்று முதல் எட்டு வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு போட்டி நடைபெற்றது. போட்டியில் ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். மூன்று கட்டங்களாக நடந்த போட்டிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.