அவிநாசி, ஜூன் 20- அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி யில் செவ்வாயன்று மாடு திருடிய நபரை மாட்டின் உரிமையாளர் பிடித்து வைத்துள் ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில், திருடிய நபரை இந்துமுன்னணி பிரமுகர் அழைத்து சென் றுள்ளார். அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சியில் பைபாஸ் சாலை அருகில் சுப்பிரமணியம் முருங்கை காடு தோட்டத் தில் கடந்த செவ்வாயன்று மேய்ந்து கொண்டிருந்த மாட்டை காணவில்லை. இதையறிந்த சுப்பிரமணியம் அருகில் இருந்த தோட்டங்களில் தேடி பார்த்த போது மாடு கிடைக்கவில்லை. பின்னர் பைபாஸ் சாலையில் உள்ள உணவ கத்தின் அருகில் மாடு கட்டி வைக்கப் பட்டிருந்தது. இதுகுறித்து உணவ கத்தின் உரிமையாளரிடம், தோட்டத்தின் உரிமையாளர் சுப்பிரமணி மாட்டை யார் இங்கே கட்டிவைத்து என கேட்டுள்ளார்.
அதற்கு உணவக உரிமையாளர், பெரிய பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் மாட்டை கட்டி வைத்துச் சென்றுள்ளார் என தெரிவித் தார். இதையடுத்து தோட்டத்தின் உரிமை யாளர் மாட்டை மீட்டு வேறு இடத்தில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் மாடு மீண்டும் திருடப் பட்டுள்ளன. இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம், தனியார் உணவக உரிமையாளரிடம் மாடு திருடிய நபரை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து உணவக உரிமையாளர் பெரிய பாளையத்தை சேர்ந்த ரமேஷை அழைத்து வந்துள்ளார். அதன் பிறகு திருடிச்சென்ற மாட்டை அவரிடமிருந்து மீட்டு சுப்பிரமணியம் தோட்டத்திற்கு மினி ஆட்டோ மூலம் கொண்டு வந்துள்ளனர். இதன்பின் அவிநாசி காவல் நிலையத்திற்கு தோட்டத்து உரிமையாளர் சுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள் ளனர். இதற்கிடையே இந்துமுன்னணியை பிரமுகர் சேகர் என்பவர்மாடு திருடிய ரமேஷை பொதுமக்களிடமிருந்து மீட்டு அழைத்து சென்றுள்ளார். இது அங்கி ருந்தவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாடு திருடிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்துக் கொண் டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி பிரமுகர் சேகர், மாட்டை திருடிய ரமேஷுக்கு ஆதரவாக காவல்துறையிடம் பேசி அழைத்துச்சென்றார் என தெரிவித் தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, மாட்டின் உரிமை யாளர் வழக்குப் பதிவு எதுவும் செய்ய வேண்டாம் என தெரிவித்தால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் அவரை விடுவித்ததாக தெரிவித்தனர்.