பொள்ளாச்சி, ஜூன் 16- பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே வனத்துறை சோதனைச் சாவடி ஊழியரை கரடி தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள எருமைப்பாறை செட்டில்மென்ட் பகுதியில் வசிப்பவர் கணேசன் (50). இவர் கேரள மாநிலம் ஆணைப்பாடி சோதனைச் சாவடியில் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி ஒன்று கணேசனை பலமாக தாக்கியது. இதில், தோள்பட்டை மற்றும் கைகளில் பல மான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை மீட்ட வனத்துறையிறனர் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து, கேரள வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.