சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசுவின் 90 ஆவது பிறந்த நாள் விழா சனியன்று கோவை டாடாபாத் ஈப்பன் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி, துணைத் தலைவர் கே.சுப்பிரமணியன், இஸ்கப் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதா கிருஷ்ணன், மாநிலப் பொருளாளர் எஸ்.கோட்டியப்பன், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரஃபி, நாடகக் கலைஞர் அரவிந்தன், கவிஞர் காமு, கவிஞர் இளஞ் சேரல், கவிஞர் பா.மீனாட்சிசுந்தரம், தொல்காப்பியர் பேரவைத் தலைவர் ஆ.காளியப் பன், கவிஞர் கவியன்பன் பாபு ஆகியோர் கலந்து கொண்டு புவியரசுக்கு வாழ்த்து தெரி வித்தனர்.