tamilnadu

img

நூல் அறிமுகம்

பொள்ளாச்சி, ஜூலை 22- பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 75 ஆவது இலக்கிய சந்திப்பு மற்றும் நூல் அறிமுகவிழா ஞாயிறன்று பொள் ளாச்சி அரிமா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இலக்கிய வட்டத்தின் தலைவர் க.அம்ச பிரியா தலைமை வகித்தார். செயலாளர் இரா. பூபாலன் வர வேற்று பேசினார். எழுத்தாளர் ஆண்டன் பெனி எழுதிய  தட்டான்குழி எனும் கவிதை தொகுப்பினை கவிஞர் மீனா சுந்தர் அறிமுகம் செய்து உரையாற்றினார். கவி ஞர் சோலை மாயவன் எழுதிய மென் இலை  பரப்பின்  பசலை எனும் கவிதை தொகுப்பினை கவிஞர் கவிதாசன் அறிமுகம் செய்தார். கவிஞர் பெரு.விஷ்ணு குமார் எழு திய ‘ழ என்ற பாதையில் நடப்பவன் ‘ எனும் கவிதை தொகுப்பினை கவிஞர் சக்தி அறிமுகம்செய்து பேசினார். இதனைத்தொடர்ந்து கவிஞர் அறிவுமதி மற்றும் கவி ஞர் கவிதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்ன தாக நடைபெற்ற  கவியரங்கில் இளம் கவிஞர்கள் தங்க ளது கவிதைகளை அரங்கேற்றம் செய்தனர். நிகழ்வின்  முடிவில் கவிஞர் கீதா பிரகாஷ் நன்றி கூறினார். இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.