திருப்பூர், நவ. 27- 2016 நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவித்தது தெரியாத நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இரு மூதாட்டிகள் சேமித்து வைத்த ரூ.46 ஆயிரம் பணம் வெற்றுத் தாள்களாகிப் போனது. இந்த பரிதாப சம்பவம் பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர் மாவட் டம்,பல்லடம் வட்டம், பூமலூர் பகு தியை சேர்ந்த சகோதரிகள் தங்கம் மாள் (78), ரங்கம்மாள் (75) . இவர் கள் இருவரின் கணவர்களும் இறந்து விட்டனர். இதனால் மகன் கள் வீட்டில் வாழ்ந்து வந்தனர். தற்போது இருவருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு மகன்கள் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது மேல் சிகிச்சைக்காக பணம் வேண்டும் என மகன்கள் கேட்டபோது, இருவரும் பல ஆண் டுகளாக யாருக்கும் தெரியாமல் வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தங்களது மகன் களிடம் கொடுத்துள்ளனர். ரங்கம் மாள் ரூ.24,000, தங்கம்மாள் ரூ. 22,000 என ரூ.46 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் மோடியால் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 பணத் தாள்களாக இருந்ததைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அந்த மூதாட்டிகள் கூறுகையில்,” வாழ்வில் சிறுகச் சிறுக சேமித்து வைத்த தொகை இது. எங்களுக்கு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த விபரம் அப்போது தெரி யாது. எங்களுக்கு போதிய படிப் பறிவும் இல்லை. இதனால்தான் இத்தனை நாட்கள் பத்திரமாக வைத்திருந்தோம். மருத்துவத் தேவைக்கென எடுத்து மகன்களி டம் கொடுத்தபோது அவர்கள் சொல்லித்தான் இந்த பணம் செல் லாது என்ற விவரம் தெரிந்தது. மேலும் மருத்துவச் செலவுக்காகத் தான் இந்த சேமிப்பு தொகையை எடுத்தோம். இல்லையென்றால் எங்களது பேரன் மற்றும் பேத்திக ளுக்கு அப்படியே எதிர்காலத்தில் கொடுத்து விடலாம் என்று எண்ணி யிருந்தோம். தற்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசு தான் இதற்கு ஒரு நல்ல தீர் வைத் தர வேண்டும்” என்றனர்.