நாமக்கல், பிப்.14- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 29ஆவது அமைப்பு தின பொதுக்கூட்டம் வெள்ளியன்று கொல்லிமலை செம் மேட்டில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் எஸ்.கே.மாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் எஸ்.தங்கராசு வரவேற்றார். இதில் மாநில பொரு ளாளர் ஏ.பொன்னுசாமி, மாநில குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பி. பெருமாள், மாவட்ட தலைவர் வி.கே.வெள்ளைச்சாமி, மாவட்ட செயலாளர் கே. சின்னசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ. பழனிசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் கே.வி.ராஜீ நன்றி கூறினார்.