tamilnadu

img

அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காக 200 மாநகர் பேருந்துகள் இயக்கம்

சென்னை, மார்ச் 25- சென்னையில் அத்தி யாவசியம் மற்றும் அவசரப் பணிகளுக்காக 200 மாநகர் பேருந்துகள் இயக்கப் பட்டன. இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல மைச்சர் உத்தரவின் பேரில், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும், அத்தியாவ சிய மற்றும் அவசரப் பணி களுக்கு அரசு போக்கு வரத்துக் கழகப் பேருந்து களை இயக்கிட போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவ சியப் பணிகளான மருத்து வம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கப்பெரு மாள் கோயில், கூடு வாஞ்சேரி, தாம்பரம், பூவிருந்தவல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக் கப்படுகின்றன. இத்தகைய அவசரப் பணிகளுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழ கத்தின் சார்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநர்க ளும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன் தெரிவித்துள்ளார்.