மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இடங்கணசாலை பேரூராட்சி கேகே நகர் பகுதியில் கொய்யா, வேப்பம் மற்றும் புங்கை மரங்கள் உள்ளிட்ட 3ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜவிஜய கணேசன் துவக்கி வைத்தார். இதில், கே.கே.நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சங்கர், சித்த மருத்துவர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் வளர்மதி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.