புதுதில்லி, பிப்.18- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் நாள் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு நீக்கியது. இதை விமர்சனம் செய்த பிரிட்டனின் தொழிலாளர் கட்சி எம்பிக்கு இந்தி யாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வெளி நாட்டில் தூதர்கள் குழு ஒன்று காஷ்மீருக்கு பயணம் செய்துவிட்டுச் சென்றது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பான பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு தலைமை வகித்துவரும் தொழிலாளர் கட்சி எம்பியான டெப்பி ஆப்ரஹாம்ஸ், தனக்கு தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இ-விசா வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி பாஜக அரசு எடுத்த முடிவு குறித்து இவர் கவலை தெரிவித்திருந்தார். இதனால் திங்கள்கிழமையன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் தில்லி வந்திறங்கிய டெப்பி ஆப்ரஹாம்ஸிடம், அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
‘’எனது பாஸ்போர்ட்டை வாங்கிய ஓர் அதி காரி, அடுத்த 10 நிமிடங்களுக்கு எங்கோ சென்று விட்டார். மீண்டும் வந்த அவர் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். தன்னு டன் வருமாறு அவர் உரத்த குரலில் கூறி னார்’’ என்று அவர் தெரிவித்தார். அதற்கு பிறகு பல பாஸ்போர்ட் அதிகாரி கள் என்னிடம் பேசினர். ஆனால் எனது விசா ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்தும், தில்லி வந்தவுடன் எனக்கு விசா உடனடியாக வழங்கப்படுமா என்பது குறித்தும் அவர்கள் யாரிடமும் எந்தப் பதிலுமில்லை என்று அவர் மேலும் கூறினார். “இதனால் தற்போது பிரிட்டனுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதற்கு நான் காத்திருக் கிறேன். இந்திய அரசின் மனம் மாறினால் ஒழிய இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கி றேன்’’ என்றார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாள ருக்கு டெப்பி ஆப்ரஹாம்ஸ் எழுதிய கடிதத்தில், இந்திய அரசின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கி அரசு அறிவித்த முடிவு அந்த பகுதி மக்களின் நம்பிக்கை க்கு துரோகம் இழைத்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.