tamilnadu

img

மாட்டின் சிறுநீர் கொரோனாவை கொல்லுமாம் ... விஞ்ஞானிகள் நிராகரிப்பு

கொல்கத்தா:
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் வகையில் பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும் என்று மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.  சமூக வலைத் தளங்களில் திலிப் கோஷ் இவ்வாறு பேசும் காட்சிகள் அடங்கிய தொகுப்பு பாஜக ஊடகக்கூலிப் படையினரால் வேகமாகப் பரப்பப் பட்டு வருகிறது.  மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், இதுபோல பேசுவது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  பசுவின் பாலில் தங்கம் உள்ளது என்று கூறியிருந்தார். கோஷின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.மாட்டின் சிறுநீர் உண்மையில் கொரோனா வைரஸைக் கொல்லாது. இது போன்ற தகவல்களால் மக்கள் திசைதிருப்பப்படலாம் என  போலி செய்திகளை எதிர்த்துப் போராடும் இந்திய விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதோடு கோஷின் கூற்றை முற்றாக நிராகரித்துள்ளனர்.

;