கொல்கத்தா:
கொரோனா விவகாரத்தை, மத்திய அரசு அரசியலாக்கி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
‘நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் பிரதமர்மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் 5-வது முறையாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போதுஅவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளையும், பெரிய மாநிலங்களையும் எல்லையாக கொண்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை தடுப்பதில் கடுமையான சவால்கள் உள்ளன. இருப்பினும் மாநில அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. இந்த இக்கட்டான தருணத்தில் மத்திய அரசு அரசியல்செய்யக்கூடாது. அனைத்து மாநிலங்களையும் சமமாகநடத்த வேண்டும். ஆனால், சில மாநிலங்களுக்கு சாதகமாகமத்திய அரசு நடந்து கொள்கிறது. ஏற்கெனவே எழுதப்பட்ட‘ஸ்க்ரிப்ட்’ அடிப்படையில் மத்திய அரசு பணியாற்றுகிறது. இவ்வாறு மம்தா விமர்சித்துள்ளார்.