சூரியனில் அதிகமான கரும்புள்ளிகள் தோன்றி வருவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் ஏற்படும் வெடிப்புகளால் உருவாகும் சூரிய காந்த புயல்கள் பூமியை தாக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதனால் விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் எனவும் எச்சரித்தனர்.
அதனைதொடர்ந்து நேற்று கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம், ஒரே நாளில் சூரிய காந்த புயல்கள் 8 முறை பூமியை தாக்கியதாக கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தனர்.
மேலும், சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். கடந்த சில நாட்களாக இந்த கரும்புள்ளிகள் அதிகளவில் தோன்றி வருகிறது.
இதனால் வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரித்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பூமியில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சூரியனை தொடர்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவுசெய்து, ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.