சென்னையில் இருந்து அலெப்பிக்கு ரயிலில் பயணித்த இரண்டு பயணிகளிடம் 1.989 கிலோ கிராம் தங்கத்தை சுங்க தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் நவம்பர் மாதத்தில் 3 முறை தங்கத்தை பல்வேறு வடிவங்களில் கடத்தி வந்தவர்களை சுங்க தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து அலெப்பிக்கு ரயிலில் பயணித்த இரண்டு பயணிகளிடம் இருந்து 1.989 கிலோ கிராம் தங்கத்தை சுங்க தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 1.04 கோடி ஆகும். இதனை கடத்தி வந்தவர்கள் இரட்டையர்கள் என்பதும், அவர்கள் இடுப்பில் ரகசியமாக கம்பிகள் போன்று சுற்றியவாறு வைத்திருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.