திருவனந்தபுரம், ஆக.27 – முற்போக்கு கலாச்சார இயக்கத்தின் சுகுமார் அழிக் கோடு நினைவு விருது- 2020 ஐ கேரள சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜாவுக்கு திரைப்பட இயக் குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்டு அமைச்சர் பேசுகையில், தனக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரம் ஆனாலும் சுகாதாரத்துறையில் அர்ப்பணிப்போடு செயல்படு வோருக்கானது என்றார். இந்த ஓணக் காலம் கோவிட் குறித்து சற்று பீதி ஏற்படுத்தும் காலமா கும். கோவிட் கூடுதல் நபர்க ளுக்கு பரவாமல் தடுக்க சுகாதா ரத்துறை எச்சரிக்கையுடன் உள்ளது. அனைவரும் இதில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு கண்ணூரில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் அழிக்கோடுடன் பங்கேற்றதை அமைச்சர் நினைவுகூர்ந்தார். சுகாதாரத்துறையில் உலகின் கவனத்தை ஈர்த்த செயல்பாடுக ளுக்காக இந்த ஆண்டின் அழிக்கோடு நினைவு விருது அமைச்சர் கே.கே.சைலஜா டீச்ச ருக்கு வழங்கப்பட்டு முற்போக்கு கலாச்சார இயக்க தலைவர் சாஸ் தாந்தல சகதேவன் கூறினார். டாக்டர் இந்திராபாபு, பனவிள ராஜசேகரன், பாப்பனங்கோடு அன்சாரி, கரமனா தினேஷ் நாயர் உள்ளிட்டோர் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர்.