திருவனந்தபுரம், ஆக.9- மூணார் ராஜமலையிலும், கரிப்பூரிலும் (கோழிக்கோடு) ஏற்பட்ட இரு துயரங்கள் இரண்டு விதமானவை. ஒரு இடத்தில் ரூ.5 லட்சமும் மற்றொரு இடத்தில் ரூ.10 லட்சம் நிவாரணமளிப்பது பாரபட்சமல்ல. இரண்டும் வெவ்வேறு விதமானது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சமூக ஊடகங்களில் நடத்தப்படும் திசை திருப்பல் பிரச்சாரத்துக்கு பதிலளித்து சனி யன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜமலையில் மீட்பு நடவடிக்கைகள் கூட இப்போதும் முடியவில்லை. அதன்பிறகு தான் பேரழிவின் அளவை மதிப்பிட முடியும். இழப்பை பின்னர் கணக்கிடலாம். அதன் அடிப்படையில் மேலும் உதவி கிடைக்கும். பெட்டிமுடியில் ரூ.5 லட்சமும், கரிப்பூரில் ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்வது பாரபட்சமானது அல்ல. இரண்டும் வெவ்வேறு விதமானவை என்று ஊடகத்தினரின் கேள்விக்கு பதிலளித்தார்.
அனைத்தையும் இழந்தனர்
மூணாறு பெட்டிமுடியில் அனைத்தையும் இழந்து விட்டனர். உறவினர்களை இழந்து விட்ட நிலையில் அவர்களை அரவணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தையும் தங்குமிடத்தையும் இழந்துள்ளனர். அதை உறுதி செய்வ தற்கான பொறுப்பு அரசுக்கு உள்ளது. மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு தான் நிலை மைகளை புரிந்து கொள்ள முடியும். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாது காப்பதுடன், அவர்களுக்கு தேவையான வற்றை அரசு நிறைவேற்றும். இப்போது அறி விக்கப்பட்ட நிதி முதல்கட்ட உதவி எனவும் முதல்வர் கூறினார். ராஜமலைக்கு போகவில்லை, கோழிக் கோடுக்கு சென்றதாகவும் ஒரு பிரச்சாரத்தை பார்க்க முடிந்தது. அதில் 2 விசயங்களை பார்க்க வேண்டும். மீட்பு நடவடிக்கை தான் தீவிரமாக நடக்க வேண்டியது. இதற்கு பல்வேறு முகவமைகள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. அந்த நடவடிக்கை இப்போதும் ராஜமலையில் நடந்து வருகிறது.
வெள்ளியன்று ராஜமலை செல்ல ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சாத்தியமல்லாத காலநிலையாக இருந்தது. மூணாறு வரையாவது செல்ல முடியுமா என்று ஆலோசித்தாலும் அதற்கும் சாத்தியமற்ற சூழ்நிலையாக இருந்தது. இப்போது அமைச்சர்களான எம்.எம்.மணியும் இ.சந்திரசேகரனும் துயரம் நடந்த இடத்தில் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் பார்வை. எங்கும் பார பட்சத்துக்கு இடமில்லை. கோழிக்கோட்டில் நடந்த மீட்பு நடவடிக்கையின் வேகத்தை பலரும் பாராட்டினர். இப்படியொரு துயரம் நிகழும் போது சில நேரம் யாரும் உயிர் பிழை க்க முடியாமல் போவதுண்டு. விமானம் தீப்பிடிக்கவோ வெடிக்கவோ செய்யாதது ஆறுதலானது என முதல்வர் கூறினார்.