tamilnadu

img

கேரளத்துக்கு வெளியிலிருந்து 88,640 பேர் வருகை கண்காணிப்பில் உள்ளோர் 91,084 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம், மே 24- கேரளத்திற்கு விமானத்தில் 7303 பேர், கப்பலில் 1621 பேர், சாலை வழியாக 76,608 பேர், ரயில் மூலம் 3108 பேர் என 88,640 பேர் வந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை  அமைச்சர் கே.கே.சைலஜா தெரி வித்தார். இதையொட்டி வீட்டு மற்றும் நிறுவன கண்காணிப்பில் 90,416 பேர் மருத்துவமனை களில் 668 பேர் என மொத்தம் 91,084 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார். கேரளத்தில் சனியன்று 62 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக பாலக்காடு மாவட்ட த்தில் 19 பேர் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேர், வெளி மாநிலங்க ளில் இருந்து வந்த 31 பேர் என வெளி யிடங்களில் இருந்து வந்த 49 பேர் உள்ளனர்.

 13 பேருக்கு தொடர்பு வழி தொற்று ஏற்பட்டுள் ளது. அதேநேரத்தில் நோயுடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 515 பேர் கோவிட்டில் இருந்து குணமடைந் துள்ளனர். சனியன்று 182 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 52,771 நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 51,045 முடிவுகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன.

மேலும்  சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழி லாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள  நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரின் 7672 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டன. அவற்றில் 7147 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2026 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. சனி யன்று மேலும் 9 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டு களாக அறிவிக்கப்பட்டன. இதோடு மாநி லத்தின் மொத்த ஹாட் ஸ்பாட்டுகள் 37 ஆக அதிகரித்துள்ளதாவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்.