திருவனந்தபுரம், ஜூலை 15- 2020 மே 27 ஆம் தேதி யுஏஇ தூதரக ஜெனரலின் அதிகாரப்பூர்வ தொலை பேசியிலிருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும், அதன்படி அலுவல் முறையில் மட்டும் சொப்னா வுடன் பேசியதாகவும் கேரள உயர்கல்வி த்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் தெரி வித்தார். இதுகுறித்து செவ்வாயன்று அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: வருடந்தோறும் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு யுஏஇ தூதரகம் நிவாரண உதவியாக உணவுப் பொ ருட்கள் கொண்ட பைகள் வழங்குவது வழக்கம். இத்தகைய நிகழ்ச்சிகளில் இரண்டு மூன்று முறை பங்கேற்றதும் உண்டு. ஆனால், இம்முறை ஊரடங்கு என்பதால் அவற்றை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் மே 27 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘உணவுப்பொருள் பைகள் தங்களிடம் உள்ளதாகவும், எங்கேனும் விநியோ கம் செய்ய விரும்பினால் தெரிவிக்க வும்’ என்பதே தூதரக ஜெனரலின் தொலைபேசியில் இருந்து கிடைத்த தகவல்.
நுகர்வோர் மத்திய வங்கி மூலம் உணவுப் பைகள் கையாளலாம் என்று கூறியதையடுத்து சொப்னா என்ற நபர் தொடர்புகொள்வதாக தூதரகத்திலி ருந்து தனக்கு செய்தி வந்தது எனவும் ஜலீல் கூறினார். எடப்பால் மற்றும் திரிபிரம்கோட் பஞ்சாயத்துகளில் சுமார் 1000 உண வுப் பொருள் பைகள் விநியோகிக்கப் பட்டன. அதற்கான பில் நுகர்வோர் மத்திய வங்கியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரிக்கு அனுப்பப்பட்டது. இந்த பணத்தை யுஏஇ தூதரகம் நுகர்வோர் மத்திய வங்கிக்கு வழங்கியது. இதுதொடர்பாக, அவர் துணைத் தூதரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சொப்னாவுடன் பேசியதாக அமைச்சர் கூறினார். பில்லுக்கான பணம் பெறுவதில் தாமதம் குறித்து தனக்கு நுகர்வோர் மத்திய வங்கி தெரிவித்ததாகவும், பணம் உடனே வழங்குமாறு துணைத் தூதர கத்துடன் தொடர்பு கொண்டதாகவும், தூதரகம் கூறியபடி தான் அவர்களை தொடர்பு கொண்டதாகவும் ஜலீல் கூறினார்.