tamilnadu

‘சுபிக்ச கேரளத்திற்கு’ ரூ.2500 கோடி நபார்டு கடன் பெரும் முன்னேற்றத்துக்கு தயாராகும் கேரளம்

திருவனந்தபுரம், மே 18-  கோவிட் 19 பின்னணி யில் கேரளத்தில் வேளாண்து றைக்கு நபார்டு வங்கி அனு மதித்துள்ள ரூ.2500 கோடி  கடன் தொகையை மிகச்சி றந்த முறையில் உரிய நேர த்தில் விநியோகிக்க முதல்வர் பினராயி விஜயன்  தலைமையில் சனியன்று நட ந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம் போன்ற துறைகளின் மறும லர்ச்சிக்கு கேரள அரசு வடி வமைத்துள்ள சுபிக்ஷ கேர ளம் திட்டத்தை வெற்றிகர மாக்க நபார்டு கடன் பயன்ப டுத்தப்படும். கேரளத்துக்கு  மொத்தமாக ஒதுக்கப்பட்டு ள்ள ரூ.2500 கோடியில் ரூ. 1500 கோடி கேரள வங்கி மூல மாகவும், ரூ.1000 கோடி கிராம வங்கி மூலமாக வும் கடனாக வழங்கப்ப டும்.

ஆரம்ப வோளாண்மை  கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயத்துக்கான கடன் வழங்கப்படும். கேரள வங்கிக்கு அனும திக்கப்பட்ட ரூ.1500 கோடி யில் ரூ.990 கோடி வேளாண் உற்பத்தி, மீன்வளம், கால்நடை வளர்ப்பு துறை களில் நடைமுறை மூலத னத்துக்காகும். மீதமுள்ள ரூ.510 கோடி சுய தொழில், கைத்தறி, கைவினை  பொருட்கள், வேளாண் உற்ப த்தி செயலாக்கம், சிறு வணி கம் போன்றவற்றுக்கு செயல்பாட்டு மூலதனமாக வழங்கப்படும். வேளாண் உற்பத்தியில் பெரிய முன்னேற்றத்தை எட்ட பழைய முறைகளில் இருந்து மாற கேரளம் தயாராகி வருகி றது என முதல்வர் தெரிவித்தார்.

விவசாயத்தில் ஆர்வம் உள்ளஅனைவரும் விவசாயம் செய்வது சாத்திய மாக வேண்டும். நிலத்தின் மீதான உரிமையைப் பார்க்கா மல் சுய உதவி குழுக்கள், விவசாயிகள் கூட்டமைப்பு, குடும்பஸ்ரீ போன்றவற்றுக்கு கடன் வழங்க கேரள வங்கி யும், தொடக்க வேளாண்மை  சங்கங்களும் கவனம் செ லுத்த வேண்டும் என்று முத ல்வர் கேட்டுக்கொண்டார். பசு, பன்றி, மீன் வளர்ப்பு போ ன்றவற்றுக்கு கடன் எளிதாக கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். கேரளத்தில் வீடு களை மையப்படுத்தி மீன் வள ர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் அரசால் உரு வாக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அமைச்ச ர்கள் இ.பி.ஜெயராஜன், கடகம்பள்ளி சுரேந்திரன், வி. எஸ்.சுனில் குமார், கே.ராஜு,  திட்டக்குழு துணை தலை வர் டாக்டர் வி.கே.ராமச்சந்தி ரன், கேரள வங்கி தலைவர்  பி.எஸ்.ராஜன் மற்றும் பல்வேறு துறைகளின் செய லாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக நபார்டு முதன்மை பொது மேலாளர் ஆர்.சீனிவாசன், நபார்டு கடன் திட்டங்கள் குறித்து விவரித்தார். நீண்டகால கிரா மக் கடன் நிதியாக கேர ளத்துக்கு ரூ.1600 கோடியும் கிடைக்கும். இதில் ரூ.500 கோடி கேரள வங்கிக்கும் ரூ. 500 கோடி கேரள கிராமிய வங்கிக்கும், ரூ.600 கோடி கேரள நில வளர்ச்சி வங்கி க்கும் வழங்கப்படும் என்றார்.