tamilnadu

img

பெருவெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.113 கோடி விமானப்படை கோரும் நிதியை ரத்து செய்யக் கோரிக்கை

திருவனந்தபுரம்:
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்டதற்கு கேரள அரசு ரூ113 கோடிவழங்குமாறு விமானப்படை கோரியுள்ளதை ரத்து செய்யுமாறு மத்தியஅரசுக்கு கேரள முதல்வர் பினராயிவிஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
2018 ஆகஸ்ட் 15 முதல் நான்கு நாட்களுக்கு விமானப்படைக்கு சொந்தமான விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தியதற்காக ரூ.113 கோடி வழங்குமாறு விமானப்படை கேரள தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்“ஒக்கி புயலும் பெருவெள்ளமும் ஏற்படுத்திய பெரும் நாச நஷ்டங்களிலிருந்து கேரளம் மீண்டு கொண்டிருக்கிறது.

எனவே மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு விமானப்படை கோரியுள்ள தொகையிலிருந்து கேரளத்தை விடுவிக்கவேண்டும்” என ரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கடித்தில் கேரளத்தின்அடிப்படை கட்டமைப்புகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளுக்கு ரூ.31ஆயிரம் கோடி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பேரிடர் நீக்க நிதியிலிருந்து ரூ.2904 கோடியே 85 லட்சம் மட்டும் கேரளத்திற்கு கிடைத்துள்ளது. கேரளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு வேறு வழிகளில் தேட மாநில அரசுமுயன்ற வருகிறது. எனவே விமானப்படை கோரும் தொகையை தர முடியாது என முதல்வர் தனது கடித்தில் தெரிவித்துள்ளார்.  ஒக்கி புயல் துயரத்தின்போது ரூ.26 கோடியை விமானப்படை கோரியது. பின்னர் ரூ.35 கோடிக்கான ஒருசெலவினமும் அனுப்பப்பட்டிருந்தது. அப்போதும் இந்த தொகையை செலுத்துவதிலிருந்து கேரளத்தை விடுவிக்குமாறு மத்தியஅரசை கேரள அரசு கேட்டுக்கொண்டிருந்தது.