திருவனந்தபுரம், ஆக.30- கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஆளுநர் ஆரிப் முகமதுகானும் அனைத்து மலையாளிகளுக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். முகநூல் காணொலி செய்தி மூலம் தனது ஓணம் வாழ்த்துக்களை முதல்வர் பினராயி விஜயன் தெரிவித் துள்ளார். அதில் அவர் கூறி யுள்ளதாவது: அசாதாரண உலக சூழ் நிலையில் இந்த முறை ஓணம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழ்நிலையை சமா ளிக்க முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும் இந்த ஓணத்தை கொண்டாடுவோம். ஓணம் என்பது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கை யுமாகும். எந்தவொரு பாதக மான சூழ்நிலையிலும் சாதக மான காலங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அது. கோவிட்டின் எல்லைக்குள் நின்று கொண்டு ஓணம் கொண் டாடுவோம் என அதில் முதல் வர் அழைப்பு விடுத்தார்.
ஒற்றுமையின் பண்டிகை
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், உலகெங்கி லும் உள்ள கேரள மக்க ளுக்கு ஓணம் வாழ்த்துக் களைத் தெரிவித்தார். ‘சிர மங்களை சமாளிக்க தைரி யம் கொண்ட கேரளாவின் ஒற்றுமை மற்றும் அன்பின் விழாவாகட்டும் ஓணம்’ என்று ஆளுநர் தனது வாழ்த்தில் தெரிவித்தார். இந்த முறை ஆளுநர் கிளிப் ஹவுஸில் முதல்ருடன் ஓணம் கொண்டாடுகிறார்.