tamilnadu

நேரு கோப்பை படகுப்  போட்டிக்கு தயாராகிறது கேரளம்

ஆலப்புழா, ஆக. 4- நேரு கோப்பை படகுப்போட்டி மற்றும் சாம்பியன் போட் லீக் போட்டிகளுக்கான பயி ற்சியும் ஏற்பாடுகளும் நடைபெற்று வரு கின்றன.   ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா, மாவட்ட காவல்துறை தலை வர் கே.எம்.டோமி ஆகியோர் படகுக ளுக்கான வரிசை எண்ணை துண்டு சீட்டு  மூலம் தேர்வு செய்தனர். இந்த போட்டியில் 20  படகுகள் (சுண்டன் வள்ளம்) பங்கேற்க  உள்ளன. நேரு கோப்பை படகுப்போட்டியில் துடுப்பு போடுவோரில் ஆள்மாறாட்டமும் எண்ணிக்கையை கூட்டுவதும் நடை பெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க போட்டி யின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பகுதியாக ஒவ்வொரு படகிலும் துடுப்பு போடுவோரின் உடையின் வண்ணத்தில் கைப்பட்டை வழங்கப்படும். துடுப்புக்காரர்களை பயிற்சி யிலிருந்தே காவல்துறையினர் கண்காணி ப்பார்கள். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.   டிக்கட் விற்பனை தொடங்கியது நேரு  கோப்பை படகுப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. என்டிபி ஆர் இணையத்தில் www.nehrutrophy.nic.in முன்பதிவு செய்து கொள்ளலாம். புக்மை  ஷோ, சவுத் இந்தியன் வங்கி ஆகியவற்றி லும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ரூ.100 முதல் ரூ.3000 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது.  இதனிடையே ஞாயிறன்று குருமாடி ஜலோத்சம் நடைபெற்றது. அமைச்சர் ஜி.சுதாகரன் துவக்கி வைத்தார்.