திருவனந்தபுரம், ஆக.22- ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட வெளிமாநிலங்களுக்கு கேரள சாலை போக்குவரத்துக் கழகம் சொகுசு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை தவிர மற்ற மாநிலங்களு க்கு 25 ஆம் தேதிமுதல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்படு வதாக இம்மாதம் 16 ஆம் தேதி அறி விக்கப்பட்டது. வெள்ளியன்று (ஆக.21) மற்றொரு அறிவிப்பை கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை க்கும் 25 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களிலிருந்து கேஎஸ்ஆர்டிசி சிறப்பு பேருந்துகள் இயக் கப்பட உள்ளன. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை இந்த சொகுசு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. மாலை 5 மணிக்கு சென்னைக்கும் அங்கிருந்து திரு வனந்தபுரம், எர்ணாகுளத்துக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவுக்கு online.keralartc.com, கோவிட் முன்னெச்சரிக்கையாக http://covid19jagratha.kerala.nic.in மூலம் பெறப்பட்ட இ-பாஸ் சமர்ப்பிக்கப் பட வேண்டும். பேருந்து ரத்து செய்யப் பட்டால் முழு தொகையும் திருப்பி செலுத் தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.