tamilnadu

img

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக கேரளம் முதல்வர் பினராயி விஜயன் சூளுரை

திருவனந்தபுரம், மார்ச் 8- இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக இரண்டாவது இடத்தில் உள்ள கேரளத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது நமது அவசரக் கடமை என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பெண்களின் பாது காப்புக்கும், அவர்கள் அதிகாரம் பெறவும் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை ஆற்ற லுடன் முன்னோக்கி கொண்டு சென்றால் முதலி டத்தைப் பிடிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.  திருவனந்தபுரம் நிஷாகந்தி கலை அரங்கில் மகளிர்தின கொண்டாட்டங்களை துவக்கி வைத்தும், வனிதா ரத்னா விருது வழங்கியும் சனியன்று (மார்ச் 7) அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பல சமுதாய வளர்ச்சிக் குறியீடு களிலும கேரளம் முன்னிலையில் உள்ளது.  பெண்கள் பாதுகாப்பிலும் பாலின சமத்து வத்திலும் அதுபோன்ற நிலையில் உள்ளது நமக்கு பெருமை அளிப்பதாகும். உலக பொரு ளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெளிவாவது பாலின சமத்துவத்தில் கேர ளம் ஒரு வெளிச்சம் காட்டுகிறது என்பதே.     கேரள பெண்கள் முன்னேற்ற வரலாற்றின் தொடர்ச்சியை இடது ஜனநாயக முன்னணி அரசு முன்னெடுத்து வருகிறது. எழுதப்பட்ட வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் கூட, துணிச்ச லான ஏராளமான பெண்கள் முன்னேற்றத்தை உட்படுத்தியதே கேரளத்தின் வரலாறு. நமது மறுமலர்ச்சியில் பெண்கள் முன்னேற்றங்கள் துவங்குவதே பேராட்டமயமான வரலாற்றி லிருந்துதான். அதன் தொடர்ச்சியிலிருந்தே கேரளத்தில் அரசின் தலைமையில் பாலின  சமத்துவத்தின் மகத்தான செய்தியை முன் வைத்து ‘வனிதா மதில்’ அமைக்கப்பட்டது.  மறுமலர்ச்சியின் மதிப்பீடுகளுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமத்துவத் துக்கான போராட்டம் முடிந்துவிடவில்லை என்கிற அறிவிப்புடன், லட்சக்கணக்கான பெண்கள் சாதி ,மதம் வயது வித்தியாசம் இல்லாமல் மனித விழுமியங்களை மீட்டெடுப்ப தற்காக அந்த பெரும் சுவரில் இணைந்தனர். இது கேரளாவில் பெண் அதிகார வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கிறது. 

பாலின சமத்துவம் சாத்தியமாகிட....
உலகெங்கும் உள்ள பெண்கள் பாலின சமத்துவத்துக்காக வெவ்வேறான போராட் டங்கள் நடத்தி வருகிறார்கள். அத்தகைய தனித்துவமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர்தினம் வந்துள் ளது. இத்தகைய அனுசரிப்புகள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அர சியல் முன்னேற்றங்களை மதிப்பிட உதவும் என்பதில் சந்தேகமில்லை.  பாலின சமத்துவம் குறித்த விவாதத்திற்கு நீண்டகால வரலாறு உள்ளது. இதில் விவா தங்களும், வழிமுறைகளும் மேலெழுந்து வந்துள்ளன என்றாலும் உலக நிலைமைகளை ஆய்வு செய்தால் ஆண்- பெண் சத்துவம் இப்போதும் சாத்தியமாகவில்லை என்பதை அறியலாம். பாலின சமத்துவம் சாத்தியமாக வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டு வரைக்கும்கூட காத்திருக்க வேண்டி வரும் என உலக பொருளாதார அமைப்பு அண்மை யில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. 144 நாடுகளில் பெண்களின் வாழ்நிலை யை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியா 108ஆவது இடத்தில் உள்ளது.

ஏட்டுப்பசு புல் புசிக்காது
சிலர் புராணங்களையும் வசனங்களையும் மேற்கோள் காட்டி பெண்களின் மகத்து வத்தைப் பாராட்டுகிறார்கள். ஆனால் தற்போ தைய இந்திய யதார்த்தம் அவர்களின் பாரம்பரி யவாத சொல்லாட்சியில் இருந்து வேறு பட்டது. ‘பெண்ணை வழிபடும் இடத்தில் தெய்வம் விளையாடுகிறது’ என்று ஒரு சமஸ் கிருத சொல்லாடல் உள்ளது. இப்படி கூறிக் கொண்டே பெண்ணை அவமதிக்கும் ஒரு சூழல் இங்கே வளர்க்கப்பட்டது. ‘ஏட்டுப்பசு புல் புசிக்காது’. வார்த்தையால் சொல்வது செய லாகாது. பெண் எதை அனுபவிக்கிறாள் என்பதே முக்கியமானது. நைனா சாஹ்னி என்கிற பெண் அரசியல்வாதியை அவரது சக செயற்பாட்டாளரான ஒரு தலைவர் தந்தூரி அடுப்பில் போட்டு சுட்டுக்கொன்ற அனுபவம் இங்குள்ளது.  எரிவாயுவுக்கும், ஸ்டவ் வெடிப்புக்கும் வரதட்சணை கொண்டு வராத பெண்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை ‘தெய்வம் விளையாடுகிறது’ என்பது போன்ற வார்த்தைகளால் மாற்றிவிட முடியாது. பெண்ணின் நிலையை உயர்த்துவதால் மட்டுமே முடியும். சட்டங்களை உருவாக்கும் அவைகளில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதாகக் கூறுபவர்கள் அதற்கான வாய்ப்பு வரும்போது அதற்கு எதிராக செயல் படுவதை நாம் காண்கிறோம். சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று. இந்த சூழ்நிலையை மாற்ற - சமூகம் அதன் மன நிலையை மாற்ற இந்த மகளிர் தினம் உத்வே கமளிக்கட்டும்.

எல்டிஎப் அரசு செய்தது என்ன?
இந்த அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக் காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப் பட்டுள்ளன. 2017இல் பெண்களின் மேம்பாட்டுக் காக சிறப்பு முக்கியத்தும் அளித்து சமூக நீதித்துறையிலிருந்து பிரித்து ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை’ அரசு உருவாக்கியது. பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், காவல்துறையில் பெண்களுக்கு முக்கியத்தும், பெண்களின் பாதுகாப்புக்காக ‘பிங்க் போலீஸ்’, பெண்க ளை மட்டுமே கொண்ட ஒரு படை (பட்டாலி யன்) உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டன.  பெண்களை சமூக ரீதியாகவும் பொருளா தார ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று ‘பொது இடம் எனக்குமானது’ என்கிற முழக் கத்துடன் நடத்தப்படும் இரவு நடை. பெண்க ளுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், பெண்களுக்கான பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் சுமார் 600 மையங்களில் கடந்த இரண்டு மாதங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொது சமூ கத்தின் மிகுந்த ஆதரவுடன் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் பெருமளவில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். அதோடு இரவு வாழ்க்கையை சாதாரணமான ஒன்றாக மாற்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குடும்பஸ்ரீ, ஆஷா ஊழியர்கள், பிரேரக்கர்கள், மகிளா பிரதான் முகவர்கள், ஜனமேத்ரி காவல்துறை மற்றும் இளைஞர் கழக குடியிருப்பாளர் கள் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன், கைத் தாங்கு கர்ம சேனா அமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மற்ற பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் இடங்களிலும், பொது இடங்களி லும், குடும்பத்திலும், சமூகத்திலும், பணியி டங்களிலும் அதிகரித்து வரும் வன்முறை களை தடுக்க 14 மாவட்டங்களிலும் ‘ஒன் ஸ்டாப்  சென்டர்கள்’ செயல்பட்டு வருகின்றன. ஆதர வற்ற பெண்களுக்கும், அவசரத் தேவைக ளுக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தனியாக வரும் பெண்களுக்கும் குழந்தை களுக்கும் இரவு நேரத்தில் இலவசமாக தங்க திருவனந்தபுரம், கோழிக்கோடு மாவட்டங்களில் ‘எனது கூடு’ திட்டம் செயல் பட்டு வருகிறது. தலைநகருக்கு அவசரப் பணி களுக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தனியாக வரும் பெண்கள் பாதுகாப்பாக தங்கு வதற்கு தம்பானூர் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தின் 8ஆவது மாடியில் ‘ஒருநாள் தங்குமிடம்’ (One day stay home) செயல் பட்டு வருகிறது.  இதுமட்டுமல்லாமல் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழிப்பறைகள் அமைக்க வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பாக தங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்படும்.  கேரளத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்காக பொதுக் கல்வித்துறையுடன் இணைந்து மாநிலத்தில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தவும் அரசு ஆலோசித்து வருகிறது. ‘ரியல் மென் காம்பெய்னிங்’ என்கிற பெயரிலான இந்த நிகழ்ச்சி அனைத்து பள்ளிக்கூடங்களையும் உட்படுத்தி நடத்தும் யோசனை உள்ளது.  ஆண், பெண் சமத்துவத்தை உறுதி செய்த சமூகத்தால் மட்டுமே முன்னேற்றத்தில் அடியெடுத்து வைக்க முடியும். அதற்கு தேவை பாரம்பரியமான மதிப்பீடுகளை இறுக்க மாக பிடித்துக்கொள்வதல்ல; மாறாக, மாறி வரும் காலத்துக்கேற்ப செயல்படுவது என்பதே யாகும். இந்த ஆண்டின் மகளிர் தினம் என்பது வெறும் உறுதிமொழிகளைவிட நல்ல சமூகத்துக்கான ஆக்கப்பணிகளை மேற்கொள் வதாக இருக்க வேண்டும். இவ்வாறு  முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.