தேனியில் 44 கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
தேனி, மார்ச் 21- தேனி மாவட்டத்தில் கொரோ னா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாக கேரளா மாநிலம் செல்லும் மூன்று சாலைகள் மூடப்பட்டன. தேனி மாவட்டத்திலிருத்து கேரளா செல்லும் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சாலைகள் மூடப்பட்டு, அத்தியாவாசிய பொ ருட்கள் கொண்டு செல்லும் வாக னங்கள் மட்டும் அனுப்பப்படு கின்றன. சில அரசு பேருந்துகள் மட்டும் சென்று வருகிறது. தனி யார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையைக் கண்காணிக்க போடி நகராட்சிக்கு வேளாண் இணை இயக்குநர் அழகு நாகேந்தி ரன், சின்னமனூர் தனி வட்டாட்சி யர் அழகுமணி, கம்பம் மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகா யினி, கூடலூர் தனி வட்டாட்சியர் பால சண்முகம், பெரியகுளம் மாவட்ட பதிவாளர் ஜெய்பிரகாஷ், தேனி நகராட்சிக்கு மாவட்ட தொழில் மைய மேலாளர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றி யத்துக்கு 3 பேர், க.மயிலை, போடி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 2 பேர், கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒருவர், 22 பேரூராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதம் மொத்தம் 44 பேர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு, விழிப்புணர்வு, கண்கா ணிப்பு மற்றும் சுகாதார நடவ டிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்கு டன் தகவல் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.