tamilnadu

img

தேசிய மக்கள் தொகை பதிவை நிறுத்திய கேரள அரசு..!

தேசிய மக்கள் தொகை பதிவு செயல்பாடுகளை கேரள அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

குரியுரிமை திருத்தச் சட்டத்திற்கும், தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் எதிராகத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வருகையில் கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், சட்டீஸ்கர் ஆகிய அரசுகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு பெரும் போராட்டங்களையும்  கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவின் செயல்பாடுகளை கேரள அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவுக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்த பின்னர் மக்கள் பலரும் பீதியில் இருப்பதால் இந்த நடைமுறையை நிறுத்துவதாக கேரளா அறிவித்துள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வரும் கேரள அரசின் இந்நடவடிக்கை அம்மாநில மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய மக்கள் தொகை பதிவி என்பது முற்றிலும் இந்திய அரசியலமைப்பு கொள்கைகளுக்கு எதிரானதாக உள்ளது. மேலும், இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மக்கள்தொகை பதிவை நிறுத்துகிறோம்” என முதலமைச்சர் அலுவலகக் கடிதம் விளக்கியுள்ளது.

இது குறித்து கேரள பினராயி கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள நிலைப்பாட்டால் எங்கள் மாநில அரசு இச்சட்டத்துக்கு ஆதரவாக எவ்வித ஒத்துழைப்பையும் தராது. தேசிய குடிமக்கள் நடைமுறையை ஒருநாளும் மேற்கொள்ள மாட்டோம். இச்சட்டம் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும்” எனக் கூறியுள்ளார்.