கொச்சி;
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷீத் அப்துல்லா ஐ.எஸ் அமைப்பில் தனது மனைவி உள்ளிட்ட 21 பேருடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களைக் கவரும் வகையில் அவர் டெலிகிராம் செயலி மூலம் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவர் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து அவரது நிலை குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரஷீத் அப்துல்லா உட்பட மூன்று இந்தியர்கள் 2 இந்தியப் பெண்கள், 4 குழந்தைகள் அமெரிக்கப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.சின் டெலிகிராம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.