tamilnadu

img

இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையம் கேரளாவில் தொடக்கம்

இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் வர்த்தக மையத்தை (ஐ.டபிள்யூ.டி.சி) கேரளா அமைக்கும் என்று சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்தது.இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI)  மூலம்  கேரளாவில் உள்ள எம்.எஸ்.எம்.இ பெண்கள் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

நோக்கம்:

பெண்கள் தொழில்முனைவோர் பயிற்சி அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாத்தல், புதிய தொழில்களைத் தொடங்க, அமைக்க அல்லது விரிவாக்க, மற்றும் அவர்களின் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்துவது  போன்றவை இதன் நோக்கமாகும்.