திருவனந்தபுரம்:
கூட்டுறவுத்துறையின் மனிதாபிமான முகம் இழந்துவிடாமல் பாதுகாக் கப்பட வேண்டும் என்று கேரள முதல்வர்பினராயி விஜயன் கூறினார். கேரளத்தில் 67 ஆவது அகில இந்தியகூட்டுறவு வார கொண்டாட்டங்களின் மாநில அளவிலான தொடக்க விழாவுக்கு முதல்வர் தலைமை விகித்தார்.அப்போது பேசிய அவர், கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் சிலர் எஜமான மனநிலையுடன் நடந்து கொள்வதாக சில புகார்கள் வந்தன.கடினமான தலையீடு கூட்டுறவுத்துறையில் அனுமதிக்கப்படவில்லை. கூட்டுறவுத் துறை பொதுவாக ஊழல் இல்லாதது.சில இடங்களில் சில தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.இதில் சம்மந்தப்பட்டவர்கள், கூட்டுறவுத் துறைக்குஊழல் ஏற்றதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிராக எல்.டி.எப் அரசாங்கம் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பெருவெள்ளத்தின் போதும், கோவிட் தடுப்பு மற்றும் சுபிக்ஷா கேரள திட்டத்திலும் கூட்டுறவுத்துறையின் முக்கியத்துவம் தெளிவானது. கிராமப்புறங்களில் விவசாயக் கடனில் பெரும்பாலானவை கூட்டுறவு வங்கிகளிடமிருந்துதான்.முதலீடு உள்ளூர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.கூட்டுறவு நிறுவனங்களால் விவசாய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்க முடியும்.கூட்டுறவு இயக்கத்தின் வலிமையைப் பொறுத்து மருத்துவத்துறையில் தலையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மாற்றம் ஏற்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் 1500 க்கும் மேற்பட்டகிளைகள் கேரள வங்கியின் தொடு புள்ளிகளாக (டச் பாயின்ட்)மாற்றப்படுவதன் மூலம், இந்தத் துறையில் ஏற்படும் மாற்றத்தை நேரடியாக அனுபவிக்க முடியும் என்று முதல்வர்கூறினார்.விழாவிற்கு கூட்டுறவு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமை தாங்கினார்.