tamilnadu

img

ரூ.3500 கோடி செலவில் மலையோர நெடுஞ்சாலை 10,000 சாலைகள், 517 பாலங்கள், 7500 கட்டடங்கள் கேரள பொதுப்பணித்துறையின் 4 ஆண்டு சாதனைகள்

திருவனந்தபுரம், ஆக.19- எல்டிஎப் அரசு 4 ஆண்டுக ளில் அமைத்தது பத்தாயி ரத்துக்கும் மேற்பட்ட பிஎம்பிசி தரத்தில் 20,000 கிலோமீட்டர் சாலைகள். 517 பாலங்கள் அமைக்கும் பணி யையும் பொதுப்பணித் துறை மேற்கொண்டுள்ளது. கேரளத்தின் கட்டுமா னத்துறை வரலாற்றில் இத்த னை பணிகள் எக்காலத்தி லும் 4 ஆண்டுகளில் மேற் கொண்டதில்லை என அமைச்சர் ஜி.சுதாகரன் கூறினார். இதுகுறித்து செய்தியா ளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஏனாத்து பாலத்தின் மறுசீரமைப்பில் இராணுவம் பயன்படுத்தப் பட்டது. குட்டநாடு தாலுகா வில் 14 பாலங்கள் கட்டப் பட்டு வருகின்றன. பாலம் கட்டுவதற்கு சிறப்பு தலைமை பொறியாளரும் மாவட்டங்களில் பாலம் பிரிவுகளும் ஏற்படுத்தப் பட்டன. நாட்டில் முதல் முறை யாக, பராமரிப்புப் பணிக ளுக்காக ஒரு தலைமை பொறியாளர் நியமிக்கப் பட்டுள்ளார். 7,500 க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் நவீனமுறையில் கட்டுமா னத்தில் உள்ளன. கிப்பி நிதி உதவியில் நடக்கும் பணிகளின் செயல்பாட்டுக் காக முந்நூறுக்கும் மேற்பட்ட பொறியியலாளர்களை நியமித்து ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. 50 துணை பதிவாளர் அலுவலக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து ஓய்வு இல்லங்களும் புதுப் பிக்கப்பட்டு முப்பதுக்கும் மேற்பட்ட புதிய ஓய்வு இல்ல கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஓய்வு இல்லங்களின் வருவாய் ரூ.2 கோடியிலி ருந்து ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது. ஓய்வு இல்லங்கள் விருந்தினர் மாளிகையின் வடிவத்துக்கு மாற்றப்பட்டன. குற்றாலம், மூணார், வைக்கம் அரசு ஓய்வு இல்லங்கள் மீட்கப் பட்டன. அதன் மூலம் ரூ.2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன.   

அரை நூற்றாண்டின் விருப்பம்
ஐம்பது ஆண்டுகால கன வான தேசிய நெடுஞ்சாலை 66 (முன்னர் NH 47) நான்கு வழி சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. காசர்கோடு முதல் களி யக்காவிளை வரையிலான 650 கி.மீ தேசிய நெடுஞ் சாலை கட்டுமான செலவில் 25 சதவீதம் மாநில அரசு பங்களிப்புடன் ரூ.44,000 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநில அரசால் ரூ.200 கோடி மதிப்பீட்டில் எர்ணாகுளம் வைற்றிலயிலும் குண்டனூரி லும் இரு பாலங்களின் கட்டு மானம் 95 சதவிகிதம் நிறைவ டைந்துள்ளது. இவை அக்டோபரில் திறக்கப்படும். ரூ.3500 கோடி செலவில் மலையோர நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, கோட்டயம், காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்க ளில் உள்ள மலைப்பாதை விரைவில் நிறைவடையும். `ரூ.413 கோடி மதிப்புள்ள 101 சிஆர்எப் சாலைகள் மற்றும் ரூ.950 கோடி மதிப்புள்ள 150 நபார்டு சாலைகள் மத்திய அரசின் நிதி உதவியில் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.4000 கோடியை உலக வங்கியும் மாநில பொதுப் பணித் துறையும் முதலீடு செய்கின்றன. ரீபில்டு கேரளா வின் 40 சாலைகள் கட்டுமா னத்தில் உள்ளன. எல்.டி.எப் அரசு இந்த 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, சேதமடைந்த பொதுப்பணி த்துறை சாலை இருக்காது என அமைச்சர் தெரிவித்தார்.