திருவனந்தபுரம், ஜூலை 16- கேரளத்தில் புதனன்று 623 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. 96 பேர் வெளி நாடுகளில் இருந்தும் 76 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். 432 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 37 பேருக்கு தொற்று ஏற்பட்ட இடம் தெரிய வில்லை என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். புதனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 9 சுகாதார ஊழியர்கள் 9 டிஎஸ்ஸி வீரர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள் ளது. இடுக்கி ராஜாகாடில் வத்சம்மா ஜோய் கோவிட் டில் மரணமடைந்தார்.
மார டைப்பைத் தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். 196 பேர் குணமடைந்தனர். புதனன்று காலை வரை 24 மணி நேரத்தில் 14,444 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுவரை 2,60,356 மாதிரிகள் பரிசோத னைக்கு அனுப்பப்பட்டுள் ளன. இதில் 7485 மாதிரிக ளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. மேலும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 82,568 மாதிரிகள் சேகரிக் கப்பட்டதில் 78,415 மாதிரி கள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன. புதிய 14 ஹாட்ஸ்பாட்டுகள் உட்பட மாநிலம் முழுவதும் தற்போது 234 ஹாட்ஸ்பாட்டு கள் உள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.