tamilnadu

img

இரட்டைக் கொலை... தியாகிகள் குடும்பத்திற்கு கொடியேரி, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, அமைச்சர்கள் ஆறுதல்

திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சி கயவர்களின் கொலைக்களத்திற்கு இரையாகி குடும்பத்தலைவனை இழந்து நிற்கும் 2 குடும்பங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள் ஆறுதல் கூறினா்.

மித்திலாஜின் சகோதரர் நிசாமிடம் குடும்ப சூழ்நிலை குறித்து தலைவர்கள் கேட்டறிந்தனர். கட்சி அவர்களுடன் இருக்கும்  உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து ஹக் முகம்மதுவின் வீட்டுக்கு சென்ற தலைவர்கள் அவரது தந்தை அப்துல்சமது, தாயார் ஷாஹிதா ஆகியோ ருக்கு ஆறுதல் கூறினர். ஒரு வயதே ஆன மகள் ஐரா தனது தாத்தாவின் மடியிலிருந்து கொடி யேரியின் மடிக்கு தாவினாள். அவளைகையில் ஏந்தி தழுவிக்கொண்ட போது அங்கிருந்தவர்களின் கண்கள் கண்ணீரில் நிறைந்தன.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனத்தலவட்டம் ஆனந்தன், அமைச்சர்கள் கே.கே.சைலஜா, ஜே.மேழ்சிகுட்டியம்மா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் சூசன் கொடியேரி உள்ளிட்டோர் தியாகிகளான ஹக் முகம்மது, மித்திலாஜ் ஆகியோரது வீடுகளுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

;