tamilnadu

img

மக்கள் நல எல்டிஎப் அரசுக்கு பெருகும் ஆதரவு 5 தொகுதிகளிலும் பாலா வெற்றி பிரதிபலிக்கும்

கோந்நி:
புதிய அரசியல் சூழ்நிலை இடதுசாரிகளுக்கு சாதகமாகும். மக்கள் நல எல்டிஎப் அரசுக்கு பெருகி வரும் ஆதரவு பாலா வெற்றியைப்போல் 5 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றி கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோந்நி சட்டமன்ற தொகுதியின் எல்டிஎப் வேட்பாளர் கே.யூ.ஜனீஷ்குமாரை ஆதரித்து தேக்குத்தோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: 54 ஆண்டுகள் யுடிஎப் வென்ற வலதுசாரி கோட்டை என கூறப்பட்ட பாலா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எல்டிஎப் போராடி வெற்றி பெற்றது. 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாலா சட்டமன்ற இடைத்தேர்தலில் எல்டிஎப் வெற்றிக்கொடி நாட்டியது. கோந்நியிலும் வெற்றி பெறுவோம் என்கிற முழுமையான நம்பிக்கையுடன் எல்டிஎப் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. ஐந்து சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பாலா வெற்றி பிரதிபலிக்கும். மக்களுடன் இணைந்து செல்லும் அணுகுமுறையை எல்டிஎப் அரசு மேற்கொண்டுள்ளது.  கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்களை வஞ்சிக்கும்போது கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் நிலைப்பாட்டை மத்திய அரசு கையாள்கிறது. விவசாயத்துறை கடுமையான நெருக்கடியில் உள்ளது. வேளாண் செலவுகள் அதிகரித்துள்ளன. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசு விவசாயத்துறையை ஓரங்கட்டும்போது, கேரள அரசு மாற்றுக் கொள்கையுடன் விவசாயிகளுக்கு துணை நிற்கிறது என கொடியேரி பேசினார்.

;